Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!

தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!

தமிழ்நாடு என்றாலே சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானது தான். தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் மரியாதையுடன், அன்புடன், சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள் என்ற ஒரு பெயரே இருக்கிறது. அழகிய மலைப் பிரதேசங்கள் முதல் வசீகரமான கிராமங்கள் வரை, மிரள வைக்கும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் முதல் பிரமிக்க பழங்கால கோயில்கள் வரை தமிழகம் மிகவும் வெவ்வேறு வகையான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. இவற்றிலேயே தனியாக பெண்களாக சுற்றுலா செல்வதற்கும், குடும்பங்களாக நீங்கள் சுற்றுலா செல்வதற்கும் மிகவும் பாதுகாப்பான தமிழ்நாட்டு சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ உங்களுக்காக!

மகாபலிபுரம்

பண்டைய பாறைக் கோயில்கள் மற்றும் கல் சிற்பங்களுக்காக அறியப்பட்ட மகாபலிபுரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும், இது உங்களை காலப்போக்கில் கொண்டு செல்கிறது. கடற்கரை கோயில் மற்றும் ஐந்து ரதங்கள் போன்ற நுணுக்கமான செதுக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைக் கண்டு வியந்திட கட்டாயம் சுற்றுலாப் பயணிகள் மகாபலிபுரத்திற்கு வருகை தர வேண்டும். மகாபலிபுரத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் எந்த குறைவும் இல்லை. எந்த அளவு தமிழக சுற்றுலாப் பயணிகளை நீங்கள் மகாபலிபுரத்தில் பார்க்குறீர்களோ, அதே அளவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பார்க்கலாம். அந்த அளவிற்கு மகாபலிபுரம் மிகவும் பாதுகாப்பானது.

coimbatore1

கோயம்புத்தூர்

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் கோவையும் ஒன்று. ஆண்டு முழுவதும் இதமான வானிலை இருப்பதால் கோயம்புத்தூருக்கு நீங்கள் எந்த நேரத்திலும் செல்லலாம். மருதமலை மலைக்கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஈச்சனாரி விநாயகர் கோயில், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், கோவை கொண்டாட்டம், சிறுவாணி அருவி ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும். கோயம்புத்தூரில், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் மலையேற்றம் செய்வது முதல், சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது முதல் எல்லாமே பாதுகாப்பானது தான்.

தஞ்சாவூர்

பெயர் குறிப்பிடுவது போல, தஞ்சாவூர் தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் இந்த இடம், அதன் வளமான கலாச்சார மதிப்பு, தஞ்சை ஓவியங்கள், ஜவுளி மற்றும் புடவைகள், உலோக சிற்பங்கள், கைவினை பொருட்கள் மற்றும் பழங்கால ஓவியங்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம், பிரகதீஸ்வரர் கோயில், விஜயநகர் கோட்டை, தஞ்சாவூர் அரண்மனை மற்றும் சிவகங்கைத் தோட்டம் ஆகியவை இப்போது தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

auroville1

ஆரோவில்

தமிழ்நாட்டின் பல நகரங்களைப் போலவே, ஆரோவில்லும் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு கலாச்சார பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஆரோவில் பாண்டிச்சேரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து உங்கள் மனதை விடுவிக்க இது சிறந்த சுற்றுலா தலமாகும். சாவித்ரி பவன், தியேட்டர் கலை மற்றும் ஆராய்ச்சிக்கான ஆதிசக்தி ஆய்வகம், வெரிடே கற்றல் மையம், சாதனா வனம் மற்றும் மாத்ரிமந்திர் ஆகியவை ஆரோவில்லில் நீங்கள் பார்க்கக்கூடிய இடங்களாகும்.

கன்னியாகுமரி

அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று நீர்நிலைகளும் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி கண்கவர் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சி அதன் மண்ணில் சுற்றுலா பயணிகளை கொண்டு வருகிறது. கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை நினைவகம், தாணுமலை கோயில், திருவள்ளுவர் சிலை, பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி நினைவிடம் ஆகியவை கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

kodaikanal3

கொடைக்கானல்

பல இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுடன், அமைதியை நாடும் தனி பயணிகளுக்கு இது ஒரு சிறந்த இடமாக கொடைக்கானல் தமிழகத்து சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த சுற்றுலாத் தலமாக இருக்கிறது. குறிஞ்சி ஆண்டவர் கோயில், கரடி சோலா நீர்வீழ்ச்சி, சில்வர் கேஸ்கேட் அருவி, தைலயார் அருவி, கொடை ஏரி, தூண் பாறைகள், கோக்கர்ஸ் வாக் மற்றும் தற்கொலை முனை எனப்படும் பசுமை பள்ளத்தாக்கு காட்சி ஆகியவை கொடைக்கானலில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களாகும்.

madurai1

மதுரை

தமிழ்நாட்டில் உள்ள சில புனிதத் தலங்களுக்குச் செல்ல நீங்கள் விரும்பினால், நகரம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் பழமையான கோயில்களை ஆராய மதுரை உங்களை வரவேற்கிறது. மதுரையில் உள்ள கோயில்களைப் பார்க்கத் தொடங்கும் போது, அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் போன்றவற்றைக் கண்டு வியந்து போவீர்கள். திருமலை நாயக்கர் மஹால், கூடல் அழகர் கோயில், மேகமலை, மீனாட்சி கோயில் மற்றும் சமணர் மலைகள் ஆகியவை மதுரையில் உள்ள சில முக்கிய இடங்களாகும். இவற்றையெல்லாம் பார்த்து விட்டு மறக்காமல் மதுரை பேமஸ் உணவுகளை ருசிக்க மறக்காதீர்கள்.

திருநெல்வேலி

பட்டியலில் கடைசி இடம் திருநெல்வேலி. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடம் தமிழ்நாட்டின் சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள சுற்றுலாப் பயணிகள் அருவிகளின் கண்கவர் காட்சிகளை அனுபவிக்கலாம், நெல்லையப்பர் கோயில், பாபநாசம் அருவி, ஹோலி டிரினிட்டி கதீட்ரல், களக்காடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் ஆகியவை பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்களாகும்.

இந்தப் பட்டியலில் உள்ள இடங்கள் யாவும் பெண்களாக சுற்றுலா செல்வதற்கும், குடும்பங்களாக சுற்றுலா செல்வதற்கும் மிகவும் பாதுகாப்பான இடங்களாகும்.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+