Search
  • Follow NativePlanet
Share
» »புரட்டாசி சனிக்கிழமை ! இந்த கோவில்களுக்கு போனா அடிக்குது அதிர்ஷ்டம்!

புரட்டாசி சனிக்கிழமை ! இந்த கோவில்களுக்கு போனா அடிக்குது அதிர்ஷ்டம்!

புரட்டாசி பிறப்பு இந்த நாலு ராசிகளுக்கும் அடிக்குது அதிர்ஷ்டம்! இந்த கோவில்களுக்கு போங்க!

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு சுதந்திரம் பெற்று தரும் மாதமாகக் கருதப்படுகிறது. அதாவது நம்மை விட்டு பிரிந்த நம் முன்னோர்களுக்கு, நாம் செய்யும் நன்றிக் கடன்கள் இந்த மாதத்தில் தான் அவர்களை நேரிடையாகச் சென்று சேர்வதாக நம்பிக்கை உண்டு. சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறையில் இருந்து தொடங்கி அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர் என்ற நம்பிக்கை இன்றும் நம் மக்களிடையே இருக்கிறது. இந்த நாட்களில் நாம் அவர்களை வேண்டி அவர்களுக்கு நன்றிக்கடன் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும் என்ற எழுதப்படாத விதிகளும் அதை நம்பும் மக்களிடையே இருக்கிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஊரில் எத்தனையோ பெருமாள் கோயில்கள் இருந்தாலும், சில முக்கிய கோயில்களுக்குப் போகும்போதுதான் அதற்குரிய புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியும். புரட்டாசி மாதம் பிறப்பு நம்மில் சிலருக்கு பாதகமாகவும், சிலருக்கும் சிறப்பாகவும் அமைகிறது. அதிலும் குறிப்பாக இந்த நான்கு ராசிகளுக்கு குறிப்பிட்ட கோவில்களின் அனுக்கிரகத்தால், நல்ல பலன் கிடைக்கப்போகிறது. வாருங்கள் அந்தந்த கோவில்களைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை புரட்டாசி மாதம் பிறந்தவுடனேயே குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிகளவில் புண்ணியம் வந்து சேரும்.

அவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய கோயில்களில் ஒன்றாக திருவண்ணாமலை கோயில் உள்ளது. அதிலும் குறிப்பாக மிதுன

ராசிக்காரர்கள்.

Emmanuel DYAN

வேணுகோபால சுவாமிவில் எங்க இருக்கு தெரியுமா?

வேணுகோபால சுவாமிவில் எங்க இருக்கு தெரியுமா?

புரட்டாசி மாதத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள வேணுகோபால

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யவேண்டும் இதேபோல திருவண்ணாமலை பூதநாராயணன் கோயிலுக்கு சென்று வழிபட்டு

வந்தால் வாழ்வில் தடைகள் நீங்கி சிறப்பு வந்து சேரும். புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு இந்த கோவில் நல்ல வளத்தை அள்ளித்

தரும்

Rashkesh

ரங்கநாத பெருமாள்

ரங்கநாத பெருமாள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்.

இங்கேயே அமைந்துள்ளது புரட்டாசி பரிகாரத் தலமான ரங்கநாத பெருமாள் கோவில். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தில்

உள்ள மூலவர் கற்சிலையால் வடிவமைக்கப்பட்டதில்லை. மாறாக சுண்ணாம்பு, மூலிகை உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகளைக்

கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் 5 தலைகள் கொண்ட நாகப்பாம்பின் சரீரத்தினால் ஆன

படுக்கையின் மீது பெருமாள் பள்ளி கொண்டு இருப்பதுபோல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

David Davies

 நித்யகல்யாண பெருமாளுக்கு போயிருக்கீங்களா?

நித்யகல்யாண பெருமாளுக்கு போயிருக்கீங்களா?


காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் புரட்டாசி மாத சிறப்புகளை அள்ளித்தரும் தெய்வமாகவார். இவருக்கு புரட்டாசி மாதம்

தொடங்கும்போதும், ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூசைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிறப்பித்தால் நோய் நொடி

நீங்கி செல்வம் வீடு வந்து சேரும்.

Ssriram mt

 மிதுன ராசி போற்றும் சகஸ்ரநாம பூசை

மிதுன ராசி போற்றும் சகஸ்ரநாம பூசை

இரவு ஏழு மணிக்கு ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம பூசைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் புரட்டாசி மாதத்தின் முழு

பயன்களையும் அனுபவிக்கலாம். முக்கியமாக இந்த புரட்டாசி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறது.

கி. கார்த்திகேயன்

 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்


திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் நவகிரக தளங்களில் புதனுக்குரியதாக விளங்குகிறது. இங்கு புரட்டாசி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது. புரட்டாசியில் திருமணம் செய்யலாமா என்ற கேள்வி பலருக்கு வரும். ஆனால் இந்த திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவிலுக்கு சென்றீர்களேயானால், திருமண வரன் வீடு தேடி வரும் என்கிறார்கள்.

Ssriram mt

 கிடைக்கும் புரட்டாசி மாத பலன்கள்

கிடைக்கும் புரட்டாசி மாத பலன்கள்

புரட்டாசி மாத பிறப்பில் இந்த கோவிலில் நடைபெறும் பூசையில் கலந்து கொள்பவர்களுக்கு புரட்டாசி மாத பலனுடன், கல்வி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். மேஷ ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் நல்ல கல்வி மற்றும் சுகாதாரத்தை அளிக்கப்போகிறது. வீட்டில் யாரும் நலம் குன்றி காணப்பட்டால், இந்த மாதம் குணமடையும். மேலும் இந்த கோவில்களில் எது அருகில் இருக்கிறதோ அங்கு செல்லுங்கள்.

Ssriram mt

பெரிய பெருமாள்

பெரிய பெருமாள்

பெருமாளின் அவதாரங்களிலேயே முதல் அவதாரம் மச்ச அவதாரம், முதல் யுகம் கிருதாயுகம் என்பதால் இவர் இத்தல மூலவர் பெரிய பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். ஆதியிலே தோன்றியதால் தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களில் முதன்மையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Nsmohan

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில்

சங்ககிரி மலையில் அமைந்துள்ளது சென்னகேசவபெருமாள் கோயில். இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் அமர்ந்து அருள்புரிகிறார். புரட்டாசி மாதங்களில் செல்லவேண்டிய கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும்.

Nsmohan

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும்.

பா.ஜம்புலிங்கம்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில்


பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் புரட்டாசி மாதங்களில் செல்லவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயிலாகும். இந்த கோவிலுக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் இடையே பிணைப்பு இருக்கிறது. இந்த மாதத்தில் ஏதாவது ஒருநாள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் உங்கள் துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழ்வீர்கள்.

Ssriram mt

 விஜயராகவப் பெருமாள் கோவில்

விஜயராகவப் பெருமாள் கோவில்

திருச்சி பொன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் அடுத்து சிறிய ராஜகோபுரமும் உள்ளன. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதி உள்ளன. கருவறையில் ராமபிரான், விஜயராகவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் காட்சியளிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

 சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்


108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் . புரட்டாசியில் குழந்தை பிறந்தால் இந்த கோவிலுக்கு வருவதாக மனதில் வேண்டி குழந்தைக்கு பெயர் சூட்டுங்கள். மேலும் நேற்றிக்கடன் நிறைவேற்றினால் சிறப்பு.

sowrirajan s

 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்


கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.

Ssriram mt

நெல்லையப்பர் ஆலயம் திருநெல்வேலி

நெல்லையப்பர் ஆலயம் திருநெல்வேலி


திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். காந்திமதியம்மனுக்கு இன்று மாலை சிறப்பு வழிபாடும் நடத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு. தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இதுவாகும்.

Ssriram mt

தியாகராஜர் கோயில் திருவொற்றியூர்

தியாகராஜர் கோயில் திருவொற்றியூர்

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

கி. கார்த்திகேயன்

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில் மயிலாடுதுறை

ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில் மயிலாடுதுறை

மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது வசந்தமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

Supraja kannan

தில்லை நடராஜர் கோயில்

தில்லை நடராஜர் கோயில்

சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. பிரதோஷ தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் துன்பம் நீங்கி வாழ்வில் கடன்சுமையின்றி வசந்தம் வீசும்.

பா.ஜம்புலிங்கம்

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில்

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில்

ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், தமிழ்நாடு 12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.

Vinayaraj

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்


கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.

Karthikeyan Raghuraman

 பெருமாள் கோவில்கள் பற்றி உங்களுக்கு தெரியாதவை

பெருமாள் கோவில்கள் பற்றி உங்களுக்கு தெரியாதவை

இந்தியாவில் பெருமாளுக்கு ஆயிரம் கோவில்களுக்கு மேல் இருக்கின்றன

பூமியில் இருக்கும் 106 பெருமாள் கோவில்களில் 86 கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

ஆழ்வார்களால் பாடப்பட்ட 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசம் என்று அழைக்கப்படுகின்றன.

திருக்கோவிலூரில் ஒரு கால் மேல் தூக்கிய நிலையில் உள்ளார்.

மதுரை கூடலழகர் கோவிலில் பெருமாள் மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார். நின்ற, அமர்ந்த, படுத்த கோலத்தில் உள்ளார்

காஞ்சிபுரத்தில் பெருமாள் 8 கைகளுடன் இருக்கிறார்.

இந்தியாவில் இருக்கும் கோவில்களில் 1000 வருடங்களுக்கு பழமையான கோவில்கள் 100க்கும் அதிகமாக உள்ளன

பத்ரிநாத் கோவில் வருடத்தில் 6 மாதங்கள் வரை பனியால் மூடப்பட்டிருக்கும்.

அகோபிலத்தில் நரசிம்மர் 9 வடிவத்தில் உள்ளார்

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X