அழகான நம் நாட்டில் அதீத இயற்கையும், கலாச்சார பாரம்பரியமும் காணப்படுகிறது. நம் நாடானது அழகிய கடற்கரைகளுக்கும், மதிமயக்கும் மலை பகுதிகளுக்கும், கம்பீரமான நினைவு சின்னங்களுக்கும் பெயர்பெற்று விளங்க, நாடு முழுவதுமுள்ள சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள சுற்றுலா ஆர்வலர்களை இவ்விடங்கள் ஈர்க்கிறது. இருப்பினும், நம் நாட்டில் காணப்படும் ஒரு சில இடங்கள், எண்ணற்ற அயல் நாட்டவரை அழகால் ஈர்த்திட, வெகு நாட்களுக்கு அவர்கள் இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.
தெற்கில் கடற்கரைகள் தொடங்கி, வடக்கின் மாபெரும் மலைகள் வரையிலென, மேற்கு தொடர்ச்சியின் பசுமையான புல்வெளிகளிலிருந்து கிழக்கின் உறுமும் வனவிலங்கு வாழ்க்கை வரை என காணப்பட, இந்தியாவில் மறைந்திருந்து நம்மை பார்க்கும் மர்மங்களின் பின்னணியை ஆராய நாடோடி பிரியனாகவும் ஒருவன் மாறிவிடுவதுண்டு. நெகிழவைக்கும் எண்ணற்ற காட்சிகளை கொண்டு வரும் இவ்விடம், நம் நாட்டின் இலக்காக அமைய, இங்கே வாழ்பவர்களால் மட்டும் விரும்பப்படாமல், அயல் நாட்டவர்களாலும் இவ்விடங்கள் பெருமளவில் விரும்பப்படுகிறது. இப்போது அயல் நாட்டவரை ஈர்க்கும் நம் நாட்டு இடங்கள் ஒரு சிலவற்றை நாம் இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
கேரளா:
சர்வதேச நாட்டவரால் பெரிதும் விரும்பப்படும் சுற்றுலா இலக்காக கேரளா கருதப்பட, இங்கே காணும் கடற்கரைகளும், ஆயுர்வேத விடுதிகளும், நீரூற்றுகளும், உப்பங்கழியுமென பலவும் அவர்களை பெரிதும் ஈர்த்திடுகிறது.
கேரளாவானது பலவிதத்தில் உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திட, அவை யாவும் நீங்கள் எதிர்ப்பாரா வண்ணமும் அமையக்கூடும். இங்கே சூழ்ந்து காணப்படும் கோவளம், வர்காலா, பேகல் என பலவற்றையும் இந்த மாநிலத்தில் நீங்கள் பார்த்து ரசித்திட, இவை திடீரென மலையாக மாறிவிட அங்கே காணும், தேயிலை தோட்டமும், வாசனை தோட்டமும் மனதை மண(ன)க்க செய்கிறது.
இங்கே இரவில் வரும் ஒருவரால், ஆலப்புழையின் உப்பங்கழி பெரிதும் ஈர்த்திட, எல்லாவற்றையும் காட்டிலும் இயற்கையை நேசிப்பவருக்கு இவ்விடம் விருந்து படைத்திட, வயனாடை நோக்கி நாம் செல்வதன் மூலம் அடர்த்தியான காடுகளையும் காண, அங்கே விதவிதமான தாவரங்களும், விலங்குகளும் காணப்படுகிறது.
PC: Sarath Kuchi
ஆக்ரா:
இவ்விடத்தை தவறாமல் காண வர காரணமாக அற்புதமான தாஜ் மஹாலின் வரைப்படமானது சுற்றுலா பயணிகளை ஈர்த்திட ஆக்ராவிற்கும் அவர்கள் வருகின்றனர். இங்கே தாஜ் மஹாலை தவிர்த்து காண பலவிருக்கிறது. இவ்விடமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக கருதப்பட அவை ஆக்ரா கோட்டை, மேஹ்தாப் பாஹ் பின்தொடர்ச்சி, பத்தேஹ்பூர் சிக்ரி, என பல நினைவு சின்னங்களாகவும் அமைய, முகலாயர்களால் மட்டுமே கட்டப்படாமல், பல்வேறு ஆட்சியாளர்களாலும் இது கட்டப்பட்டிருக்கிறது.
PC: Joel Godwin
ஹம்பி:
வரலாற்று மற்றும் பாரம்பரியமானது ஹம்பியின் சிறப்பம்சமாக அமைய சுற்றுலா பயணிகளை இவ்விடம் பெரிதும் ஈர்க்க, இடங்களான ஹிப்பி தீவும் உலகம் முழுவதுமுள்ள சுற்றுலா ஆர்வலர்களால் கொண்டாடப்பட, குறிப்பாக அமைந்து காணப்படும் சூழலால் எண்ணற்ற சுற்றுலா ஆர்வலர்கள் இங்கே மகிழ்ச்சியில் மூழ்கி, பழங்காலத்து ஆலயங்களையும், இடிபாடுகளையும் ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர்.
ஹம்பியானது உலகத்தின் சுயமாக பளிச்சென்னும் இடிபாடுகளை கொண்டிருக்க, சிற்பங்களின் திருவிழா, யாத்ரீகத்தளத்தினால் பரவசம், திரும்பியவர்களின் அடைக்கலம், கலைஞர்களின் உத்வேகம், எழுத்தாளர்களின் ஈர்ப்பு என பலவற்றையும் கொண்டிருக்கிறது. இவ்விடமானது மில்லியன் கணக்கான விஷயங்களை ஒரே நேரத்தில் கொண்டு காணப்படுகிறது.
PC: Jean-Pierre Dalbéra
கோவா:
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமென ஒருவர் ஆன்மாவை உணர வைக்கிறது கோவா. இவ்விடமானது விளையாட்டு நிரம்பி அதிர்வை ஏற்படுத்த, குதூகலமான கலாச்சாரமும் கொண்டிருக்க, ஆகையால், நம் பருவ விடுமுறைக்கு ஏற்ற இடமாக சிறந்து விளங்குகிறது. கடற்கரை பார்டியிலிருந்து என அனைத்து இரவும் உல்லாசத்தை தந்திட, மறைந்திருந்து பார்க்கும் குகைகளும் மற்றுமோர் ஆத்மார்த்தமான உணர்வை கோவாவில் தர, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று இங்கே கிடைத்திடுகிறது.
PC: Unknown
ரிஷிகேஷ்:
உலகின் யோகா தலைநகரமாக அழைக்கப்படும் ரிஷிகேஷ், காந்தமாக நம்மை ஈர்த்திட, ஆன்மீக ஆர்வலர்களின் விருப்பத்திற்கு ஏற்ற எண்ணற்ற ஆசிரமங்களையும், பல்வேறு யோகா மற்றும் தியான வகுப்புகளையும் இவ்விடம் கொண்டிருக்கிறது. இதனை தவிர்த்து, இவ்விடமானது பெயர் பெற்ற நதி நீர் படகு சவாரியின் இலக்காகவும் நம் நாட்டில் விளங்குகிறது.
ஒவ்வொரு வருடமும், எண்ணற்ற மக்களை கொண்டு காணப்படும் ரிஷிகேஷ், குதூகலிக்கவும், அனுபவத்தைக்கொள்ளவும் உதவ, வெள்ளை நிற நீர் படகு சவாரி த்ரில்லான அனுபவத்தையும் நம் மனதில் தருகிறது. எண்ணற்ற விரைவுகள் காணப்பட, அவை ஆபத்தானதிலிருந்து மிதமானதாக வரை அமைய, இங்கே வரும் ஒருவரால், சிவ்புரியிலிருந்து ராம் ஜூலா வரைக்கும் பயணம் செய்திடவும் முடிகிறது.
PC: Vishal chand rajwar