தீம் பார்க் என்றால் சாகச விளையாட்டுகள் நிறைந்த எண்டர்டெயின்மென்ட் பார்க், நீர் விளையாட்டுகள் அடங்கிய வாட்டர் பார்க், பனிக்கட்டி விளையாட்டுகள் கொண்ட ஸ்னோ பார்க் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், குந்தா சத்யநாராயண கலா தாமம் என்றும் அழைக்கப்படும் சுரேந்திரபுரி தீம் பார்க் இந்தியாவிலேயே ஒரு வித்தியாசமான தீம் பார்க் ஆகும். இது கலாச்சாரம் மற்றும் இந்திய பாரம்பரியத்தை பற்றிய ஒரு புரிதலை வழங்குகிறது. இந்த பார்க்கில் இந்திய தொன்மங்கள், வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஆழ்ந்த அனுபவத்தை பெறலாம். இந்த தீம் பார்க்கின் சிறப்பம்சங்கள் என்ன? எதனால் இது தனித்துவமானது?
நுணுக்கமான சிற்பங்கள் மற்றும் சிலைகள்
இந்த பூங்காவில் பல்வேறு தெய்வங்கள், முனிவர்கள் மற்றும் புராண கதாபாத்திரங்களை சித்தரிக்கும் ஈர்க்கக்கூடிய சிலைகள் மற்றும் சிற்பங்களின் வரிசை உள்ளது. இந்த கலைப்படைப்புகள் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தளிக்கும் வகையில் சிக்கலான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹனுமானின் மிகப்பெரிய சிலை, பூங்காவின் மேல் உயர்ந்து நிற்கிறது மற்றும் சிவன், விஷ்ணு மற்றும் துர்கா தேவி போன்ற பல தெய்வங்களின் அழகிய சிலைகளை நாம் காணலாம்.
காஷ்மீர் to கன்னியாகுமரி அனைத்து கோயில்களும் இங்கே
இந்தியாவின் சிறந்த யாத்ரீக ஸ்தலங்களையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாவாகும். அமிர்தசரஸ் பொற்கோயில்கள் முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வரை, கொல்கத்தாவின் காளி கோவில் முதல் பூரி ஜகன்னாதர் கோவில் வரை, குஜராத்தின் சோம்நாத் கோவில் முதல் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் வரை, ஏன் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் வரை எண்ணற்ற பிரபலமான கோவில்களின் பிரதிகளை இங்கே நாம் காணலாம். சுரேந்திரபுரியின் உள்ளே 3 கிலோமீட்டர் தூரத்தில் 3000க்கும் மேற்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. மேலும் இங்கு நீங்கள் பல்வேறு தெய்வங்களின் சன்னதிகளையும், ஓவியங்களையும் கண்டு களிக்கலாம்.

பாரம்பரிய மற்றும் கலாச்சார நுண்ணறிவு
சுரேந்திரபுரி அதன் கண்காட்சிகள் மூலம் இந்திய தொன்மங்கள் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி பார்வையாளர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பூங்காவின் ஒவ்வொரு பகுதியும் காட்சிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் தகவல் தகடுகள் மற்றும் வழிகாட்டிகளுடன் உள்ளன. இந்த பூங்கா இந்திய தொன்மவியல் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான கல்வி மையமாக செயல்படுகிறது, இது பண்டைய கதைகள் மற்றும் மரபுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
கலை மற்றும் கட்டிடக்கலை
சுரேந்திரபுரியின் கட்டிடக்கலை வடிவமைப்பு பாரம்பரிய இந்திய பாணிகளின் கலவையாகும், இது பல்வேறு பகுதிகளின் கலைத்திறன் மற்றும் கைவினைத்திறனைக் காட்டுகிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கட்டமைப்புகளை அலங்கரிக்கும் விரிவான சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

அமைதியான அனுபவத்தை வழங்கும் தீம் பார்க்
சுரேந்திரபுரி, பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அதிக அளவில் பயணம் செய்யாமல் பல புனித தலங்களின் ஆன்மீக சாரத்தை அனுபவிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த பூங்கா அமைதியான மற்றும் பிரதிபலிப்பு சூழ்நிலையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆன்மீக சிந்தனை மற்றும் வழிபாட்டிற்கு ஏற்றது.
மத முக்கியத்துவம் வாய்ந்த தீம் பார்க்
இது பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமல்லாமல், பல்வேறு மத நம்பிக்கைகளுடன் செயல்படுகிறது. இங்கு நீங்கள் ஹனுமன் சன்னதியில் சுப்ரபாதசேவா, மந்யுஸுக்தம் ஸஹஷோதோபசார பூஜா, பஞ்சமுத்ராநிஜாபிஷேகம், மன்யுசூக்தம் பாராயணம் ஆகியவற்றில் கலந்துக் கொள்ளலாம, மேலும் நாக கோடியில் நாக தோஷம், குஜ தோஷம், காலசர்ப்ப தோஷம் ஆகியவற்றை மேற்கொண்டால் தோஷங்களில் இருந்து முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக பேசப்படுகிறது.

எப்பொழுது மற்றும் எப்படி செல்ல வேண்டும்?
இந்த புராண தீம் பார்க் ஹைதராபாத் நகரில் இருந்து 59 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் ஹைதராபாத்தில் இருந்து டாக்ஸி அல்லது பேருந்து மூலம் சுரேந்திரபுரியை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்திடலாம். பெரியவர்களுக்கு ரூ. 350, பத்து வயதிற்கு குறைவான சிறார்களுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தீம் பார்க் வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கிறது.



Click it and Unblock the Notifications





