குளிர்காலம் வந்தாலே வெள்ளை போர்வை போற்றிய பனிப்பொழிவை காண மக்கள் சிம்லா, மணாலி, காஷ்மீர் போன்ற வட இந்திய நகரங்களுக்கு படையெடுப்பார்கள்! இந்த ஆண்டு காஷ்மீரில் கூட பனிப்பொழிவு குறைவாக உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், நம்ம ஊட்டி மற்றும் நீலகிரியின் சில பகுதிகளில் உறைபனி 0 டிகிரியை தொட்டுள்ளது. இதனால் ஊட்டி முழுவதும் வெள்ளை பனி காணப்படுகிறது. நீங்கள் ஊட்டி செல்ல இதுவே சரியான நேரம்!
பனி இல்லாமல் வறண்டு கிடக்கும் காஷ்மீர்
ஆண்டுதோறும் குளிர்காலத்தில் வட இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஏற்படும் பனிப்பொழிவை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். அதே போல இந்த ஆண்டும் இந்தியாவின் அழகிய சுற்றுலாத் தலமான காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆண்டுதோறும் வெள்ளைப் போர்வை போற்றப்பட்டது போல பனிப்பொழிவினால் மூடப்படும் காஷ்மீர், இந்த ஆண்டு மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வீடு திரும்புகின்றனர்

ஊட்டியில் 0 டிகிரி மற்றும் உறைபனி
நீலகிரி மாவட்டத்தில் ஒரு தனித்துவமான குளிர்கால அதிசயம் வெளிப்பட்டுள்ளது. மலைகளின் நடுவே அமைந்திருக்கும் தலைகுந்தா கிராமம் உட்பட ஊட்டியின் பல பகுதிகளில் சமீப நாட்களில் வெப்பநிலையில் அரிதான சரிவை அனுபவித்தது, வெப்பநிலை 0 டிகிரியாக சரிந்தது. அதனால் ஊட்டி உட்பட நீலகிரியின் பல பகுதிகள் வெள்ளை போர்வை போற்றியது போல அழகாக காட்சியளிக்கிறது.
ஊட்டி செல்ல இதுவே சரியான நேரம்
புதிய பனித்துளிகள், வெள்ளை பனியின் பளபளக்கும் போர்வையாக மாற்றப்பட்டு, மாவட்டத்தின் பச்சை புல்வெளிகளை அலங்கரிக்க ஆரம்பித்துள்ளது. சமீப நாட்களில் ஊட்டியில் நிலவும் உறைபனியை காண சுற்றுலா பயணிகள் நீலகிரி நோக்கி படையெடுத்துள்ளனர். நீங்களும் ஊட்டி செல்ல இதுவே சரியான நேரம். ஊட்டி செல்லும் போது இந்த அழகிய இடங்களுக்கு செல்ல தவறாதீர்கள்.
ஊட்டியில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்
அவலாஞ்சி ஏரி
ஊட்டியில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அவலாஞ்சி ஏரி ஊட்டியில் சுற்றுலா செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். மலைகள் மற்றும் நிலப்பரப்புகளின் பசுமைக்கு மத்தியில் அழகாக அமைந்திருக்கும் இந்த ஏரி பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஊட்டி தாவரவியல் பூங்கா
தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ஊட்டியில் பார்க்க மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். 55 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் இந்தத் தோட்டம் ஃபெர்ன் ஹவுஸ், லோயர் கார்டன், இத்தாலியன் கார்டன், கன்சர்வேட்டரி மற்றும் நர்சரிகள் என ஐந்து வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சென்றால் இந்த தேவாலயத்திற்கு செல்ல தவறாதீர்கள்.
மான் பூங்கா
ஊட்டி ஏரியில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மான் பூங்காவை சாலை வழியாக எளிதில் அணுகலாம். அதன் வளமான விலங்கினங்களுடன் சாம்பார் மற்றும் சித்தல் போன்ற மான் வகைகளுடன், மான் பூங்கா, குறிப்பாக வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வருகையை வழங்குகிறது.
தொட்டபெட்டா சிகரம்
2623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் நீலகிரியின் மிக உயரமான சிகரமாகும். அடர்ந்த ஷோலாக்களால் மூடப்பட்டிருக்கும் இந்த சிகரம் மலையேற்றப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.

முதுமலை தேசியப் பூங்கா
கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் இணைக்கும் ஊட்டி மைசூர் வழித்தடத்தில் உள்ள முதுமலை தேசியப் பூங்கா, ஊட்டிக்கு சுற்றுலா செல்லும்போது இயற்கை ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய மற்றொரு இடமாகும்.
கலஹட்டி நீர்வீழ்ச்சி
ஊட்டியில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில், ஊட்டி-மைசூர் சாலையில் அமைந்துள்ள அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான கலஹட்டி நீர்வீழ்ச்சி, நீங்கள் ஊட்டி சுற்றுப் பயணத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.
எமரால்டு ஏரி
எமரால்டு கிராமத்திற்கு அருகில் சைலண்ட் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படும் இடத்தில் எமரால்டு ஏரி அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உல்லாசப் பயணத்திற்கு ஏற்ற இடமான அழகிய ஏரியில், நீங்கள் ஓய்வெடுக்கவும், உங்கள் அன்புக்குரியவருடன் தரமான நேரத்தை செலவிடவும் முடியும்.
புனித ஸ்டீபன் தேவாலயம்
இந்த இடம் அமைதியான சூழ்நிலையையும், ஆன்மீக ரீதியில் உங்களை குணப்படுத்தும் நல்ல அதிர்வுகளையும் கொண்டுள்ளது. தேவாலயம் அதன் வளாகத்தில் பல்வேறு பூக்களைக் கொண்ட ஒரு அழகியல் தோட்டத்தை வைத்திருக்கிறது, இது மேலும் அழகு மற்றும் வசீகரத்தை சேர்க்கிறது.



Click it and Unblock the Notifications





