இந்தியாவில் நகர்ப்புற வெள்ளம் மெதுவாக ஒரு வழக்கமான நிகழ்வாக மாறத் தொடங்கியுள்ளது. 2015இல் சென்னையில் வெள்ளம், 2017இல் மும்பையில் வெள்ளம், 2010இல் கவுகாத்தியில் வெள்ளம், 2017இல் பெங்களூரு வெள்ளம் மற்றும் 2020இல் ஹைதராபாத் வெள்ளம் இவை யாவையும் மக்கள் மறந்திருக்க முடியாது. நாம் சரிவர நமது சுற்றுப்புறங்களை சீராக பார்த்து கொள்ளவிட்டால் சென்னை மறுபடியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உண்டு!

வழக்கமான நிகழ்வாக மாறிவிட்ட நகர வெள்ளப்பெருக்கு
முன்பெல்லாம் வெள்ளம் ஏற்படுவது இயற்கை சீற்றத்தால் மட்டுமே அரங்கேறியது. தற்போதைய காலகட்டத்தில் ஏற்படும் வெள்ளமானது இயற்கை சீற்றத்தையும் தாண்டி மனித செயல்களால் ஏற்படும் விளைவுகளின் பிரதிபலிப்பாகவவே உள்ளது. இயற்கை இடியாய் இடித்து மழையை கொட்டினாலும், அது கடந்து சென்று கடலை அடைவதற்கு வழி வேண்டுமே. அதனால் தானே இவ்வளவு அவதிப்படுகிறோம். மழை வருவதும் வெள்ளம் ஏற்படுவதும் இந்தியாவின் பெருநகரங்களில் இப்போது மிகவும் சாதரணமாகிவிட்டது.
நகர்ப்புற விரிவாக்கம்
இந்தியாவில், ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய நகரங்களில் கட்டுப்பாடற்ற மற்றும் தடையற்ற நகர்ப்புற விரிவாக்கம் ஒரு மேலாதிக்க நிகழ்வாக உள்ளது.
நகர்ப்புற வெள்ளத்திற்கான இயற்கை காரணங்கள்
வானிலை நிகழ்வு: சூறாவளிகள் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவை உண்டாக்குவதால் கனமழை பெய்து இறுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அதிக மழை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஏற்படும் கனமழையின் விளைவாக, திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.
ஆற்றின் போக்கில் மாற்றம்: ஆறுகளின் தடம் திடீரென்று மாறும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

நகர்ப்புற வெள்ளத்திற்கான மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்கள்
போதிய வடிகால் உள்கட்டமைப்பு: இந்திய பெருநகரங்கள் பெரும்பாலும் போதிய வடிகால் வசதி இல்லாமலே உள்ளது.
நகர்ப்புற வளர்ச்சி: கடந்த 20 ஆண்டுகளில், இந்திய நகரங்கள் அதன் அசல் கட்டப்பட்ட பகுதியுடன் பன்மடங்கு வளர்ந்துள்ளன.
மாசு: மக்கள்தொகை அதிகரிப்பு இயற்கையான கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுகளை அடைக்கிறது.
ஆக்கிரமிப்பு: இயற்கையான வடிகால் பாதைகள், ஏரிகள், குளங்கள் யாவும் இப்போது கட்டிடங்களாக மாறி வருகின்றன.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள்: ஏரியின் நீர்ப்பிடிப்பு மற்றும் பாத்திகளில் மணல் மற்றும் குவார்ட்சைட் போன்ற கட்டுமானப் பொருட்களுக்கான சட்டவிரோத சுரங்கங்கள் நீர்நிலையில் மிகவும் தீங்கு விளைவிக்கும்.
நிர்வாக கட்டமைப்பு இல்லாதது: நாட்டில் உள்ள மொத்த நகர்ப்புற நீர்நிலைகளின் எண்ணிக்கை குறித்த தரவு அரசிடம் இல்லை.
மறக்க முடியாத 2015 வெள்ளம்
400 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்த பேரழிவுகரமான வெள்ளம் ஏற்பட்டு 8 ஆண்டுகள் முடிந்திருந்தாலும், சாதாரண மழைக்கும் கூட சென்னை மக்கள் அஞ்சுகின்றனர். அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் உடமைகளை இழந்து, வீடற்று எண்ணற்ற மக்கள் அவஸ்தைக்கு உள்ளாகினர்.

சென்னையில் மறுபடியும் வெள்ளம் வருமா
சென்னையில் இப்போது 2015 இல் ஏற்பட்டது போல ஒரு பெரும்வெள்ளம் ஏற்படுவது வாய்ப்புகள் இல்லை. ஆனால் கடல் மட்டம் கணிசமாக உயர்ந்து கொண்டிருப்பதுடன் வெப்ப அலைகள் தீவிரமடைவதால், எதிர்காலத்தில் தீவிர வானிலையின் தாக்கத்தைத் தணிக்கவும், 2015 இல் மீண்டும் கொடிய வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் நகரம் கட்டமைப்புகளையும், வடிகால் வசதிகளையும் சரி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2050 இல் சென்னை சந்திக்கப்போகும் பேரழிவு
புவியியல் ரீதியாக, சென்னை கடலோர பகுதியாக ஒரு தாழ்வான சமவெளியில் அமைந்துள்ளது. அதாவது நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து இரண்டு முதல் ஐந்து மீட்டர் உயரத்தில் உள்ளன. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) 2050 ஆம் ஆண்டில் பெரும் வெள்ள சேதத்தை எதிர்கொள்ளும் உலகின் 20 கடலோர நகரங்களில் ஒன்றாக சென்னையை குறிப்பிட்டுள்ளது. அப்போது சென்னை மிகப்பெரிய இயற்கை பேரழிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications





