முக்கொம்பு அணை காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மேல் கட்டப்பட்டதாகும். இந்த அணை நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி மாநகருக்கு நெருக்கமாக அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலமாக இது உள்ளது.
இங்கு கேளிக்கை பூங்கா, சிறுவர் பூங்கா, மீன்பிடித்தல் மற்றும் ஒரு சில விளையாட்டுகள் என பல இடங்கள் உள்ளன. இதன் விளைவாக இந்த இடமானது மிகப்பிரபலமான சுற்றுலா தலமாகவும், வார இறுதியில் நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற நுழைவாயிலாகவும் திகழ்கிறது.