வெக்காளியம்மன் கோவில் திருச்சியில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சோழர்களின் இருப்பிடமாக இருந்த இக்கோவில் ஒரு முக்கியமான புனித யாத்திரை மையமாக திகழ்கிறது.
கோயிலின் மிக முக்கியமான அம்சம் கோவில் முக்கிய தெய்வத்தின் தலைக்கு மேலே மேற்கூரை கிடையாது. இதற்கு காரணம் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தங்கள் தலைக்கு மேல் கூரை கிடைக்கும் வரை அதாவது வசிப்பதற்கு இடம் கிடைக்கும் வரை தனக்கு கூரை அமைக்கவேண்டாம் என்று வெக்காளியம்மன் தனது பக்தர்களை கேட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது.
இக்கோயிலின் விஷேச நாட்கள் என்று கருதப்படும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டத்தை இங்கு அதிகமாக பார்க்கலாம்.