கர்நாடக மாநிலத்தின் ஹுப்பளியின் எல்லைப்பகுதியில் ‘உன்கல்’ எனும் இட த்தில் இந்த சந்திர மௌலேஸ்வரர் கோயில் உள்ளது. இது 900 ஆண்டுகளுக்கு முன்னர் சாளுக்கியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் சிறப்பம்சங்களாக நான்கு திசைகளிலும் அமைந்துள்ள கதவுகளும் இரண்டு சிவலிங்கங்களும் காணப்படுகின்றன. இதர அம்சங்களாக சிற்பங்களுடன் கூடிய சுவர்களும் தூண்களும் கருப்பு கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.
பக்தர்களுக்கான ஆன்மீக தரிசனத்துக்காக இங்கு நடனமாடும் கணேஷ கடவுள் மற்றும் ஜலந்தர கடவுளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் 11 மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தாக அறிவிக்கின்றன.
திறமையான சிற்பிகளாலும், கலைஞர்களாலும், கொத்தர்களாலும் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் இது யாரால் கட்டுவிக்கப்பட்ட து என்ற வரலாறு தெரியவில்லை.
ஹுப்பளி, பெங்களூர் மற்றும் மங்களூரிலிருந்து இந்த கோயிலுக்கு வருவதற்கு நிறைய பஸ் வசதிகள் உள்ளன. டாக்ஸி மற்றும் ஆட்டோவிலும் செல்லலாம்.