கர்நாடக மாநிலத்தில் அதிகம் விரும்ப்ப்படும் கடற்கரைகளுள் ஒன்று இந்த கௌப் கடற்கரையாகும். குளுமையான சூழலுக்கும் அமைதியான சுற்றுப்புறத்துக்கும் இது பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த கடற்கரை பசுமையான இயற்கைச் சூழல் சுற்றிலும் இருக்க எழில் நிறைந்து காணப்படுகிறது. இங்கு வீசும் குளுமையான காற்று நமக்கு புத்துணர்ச்சியூட்டுவதால் இது அனைவராலும் விரும்பப்படும் இயற்கை எழில் நிறைந்த கடற்கரையாக கருதப்படுகிறது.
மேற்குக் கடற்கரைப்பகுதியில் இந்த கடற்கரையை ஒட்டி மேற்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சிற்றுலா செல்வதற்கு வசதியாக இது உடுப்பியிலிருந்து 12 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது ஒரு விசேஷமாகும்.
கடலில் நீச்சல் அடிக்கவும் வெயில் காயவும் கூட இது ஏற்ற கடற்கரையாகும்.இந்த கடற்கரை ஸ்தலத்துக்கு உடுப்பியிலிருந்து எந்த வாகனத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். இங்கு ஒரு பாழடைந்த ஜைனக்கோயிலும் உள்ளது. இங்கு 27.12 மீட்டர் உயரமுள்ள கலங்கரை விளக்கமும் உள்ளது.
இந்த கடற்கரையை ஒட்டி ஒரு பழைய கோட்டையின் இடிபாடுகளும், மாரியம்மா கோயிலும் உள்ளது. இந்த பீச்சுக்கு எப்போதும் எந்த நேரத்திலும் செல்லலாம்.