ஹயாங் நீர்வீழ்ச்சி, இந்திய மியான்மர் எல்லை அருகே உள்ள மணிப்பூரின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். உள்ளூர் மக்கள் இதனை ஹயாங் என அழைத்தாலும், இதற்கு `டெலி' நீர்வீழ்ச்சி என்கிற மற்றொரு பெயரும் உள்ளது. உக்ருள் மாவட்ட கமிஷனர் செய்த ஆய்வின் படி, இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 754 அடி ஆகும்.
கம்பீரமான இந்த நீர்வீழ்ச்சி மலையில் இருந்து மெதுவாக கீழே இறங்கி வருகிறது. எனினும், இது உக்ருள் வனங்களின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளிடையே பிரபலமடையவில்லை. அரசாங்கமும், இந்த நீர்வீழ்ச்சியை பிரபலப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது நீர்வீழ்ச்சியை 5 முதல் 6 நாட்கள் வரை காடுகளில் பயணம் செய்து சில ஆறுகளை கடந்தே அடைய முடியும். இந்த அருவியை அடைய நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகம் என்றாலும், அதன் இறுதி பயனை வெறுமனே வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சாகச விரும்பிகளுக்கு, ஆட்கொள்ள முடியாத இந்த சாலையில் பயணித்து ஹயாங் நீர்வீழ்ச்சியை அடைவது நிச்சயமாக ஒரு மதிப்பு மிக்க பயணமாக இருக்கும். இந்த நீர்வீழ்ச்சிக்கு ட்ரெக்கிங் செல்வதற்கு முன் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்று உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.



Click it and Unblock the Notifications