தயுன்சார் மஹாதேவ் கோவில் உணாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். புரணக்கதைகளின் படி, மகாபாரதத்தில் வரும் பாத்திரங்களான பாண்டவர்களின் குடும்ப துறவியான தயும்யா ரிஷி என்பவர் இந்த இடத்திற்கு வந்து இவ்விடத்தின் அழகினால் ஈர்க்கப்பட்டார்.
இந்து கடவுளான சிவபெருமானை இந்த இடத்தில் வைத்து அவர் வழிபட்டார். அவருடைய பக்தியைக் கண்ட சிவபெருமான், இந்த இடத்தில் அவரை வழிபடும் அனைவருக்கும் அவர்கள் நினைத்த காரியம் நடக்கும் என்ற வரத்தை அளித்தார்.
அன்றிலிருந்து, தயுமேஷ்வர சதாசிவ தீர்த்தம் என்றழைக்கப்பட்ட இந்த இடம், இப்பொழுது தயுன்சார் மஹாதேவ் என்று அழைக்கப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர், உத்தரகாசியைச் சேர்ந்த துறவியான சுவாமி ஆனந்த் கிரி என்பவரால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது.
இங்கு கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையான சிவராத்திரியின் போது, பெரும் ஜனத்திரளான மக்கள் வந்து, இங்கிருக்கும் சிவலிங்கத்திற்கு பால் மற்றும் வெண்ணையை வழங்கி அருள் பெற்று செல்வார்கள்.
இந்த நாட்களில் இங்கு நடத்தப்படும் கண்காட்சியானது மக்களிடம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, 'செரைய்ஸ்' எனப்படும் சத்திரங்களும், குடிநீர் தொட்டியும் இந்த கோவிலுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications