சிங்ஷோர் பாலம் பெல்லிங் என்ற இடத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. சிக்கிம் மாநிலத்திலேயே இந்த பாலம் மிக உயரமான பாலம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ஆசியாவிலேயே மிக உயரமான பாலங்களில் இரண்டாவது பாலமாக இருந்து வருகிறது. இந்த பாலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இருக்கிறது.
ஏனெனில் இந்த பாலம் இரண்டு மிக உயரமான மலைகளை இணைக்கிறது. அதனால் இந்த பாலத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து பரவசமாகின்றனர்.