முன்பு டார்பாவதி என்று அழைக்கப்பட்ட டபோய் வதோதரா நகரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். பழமையான கோட்டை அரணாக விளங்கும் இந்த நகரம் அதன் கிர்னார் ஜெயின் கல்வெட்டுகளுக்காக மிகவும் புகழ் பெற்றிருக்கிறது.இந்து இராணுவ கட்டிடக்கலைக்கு ஒரு வாழும் எடுத்துக் காட்டாக இங்கிருக்கும் டாபோய் கோட்டை உள்ளது.
இந்த நகரத்திற்கு 4 கதவுகள் உள்ளன--ஹிரா பாகோல் கிழக்கிலும், வதோதரா கேட் மேற்கிலும், சம்பானேர் கேட் வடக்கிலும் மற்றும் நன்தோட் கேட் தெற்கிலும் உள்ளன. முதன்மையான சமண புனிதத்தலமான இங்கே 6 கோவில்கள் உள்ளன. இதில் முதன்மையான கோவிலான ஸ்ரீ லோதான் பார்ஷவநாத் கோவில் உள்ளது.