மூன்று பசுமையான பாறைத்திட்டுகளுக்கு நடுவே கண்ணைக்கவரும் இயற்கை எழிலுடன் இந்த வாகமண் ஏரி வீற்றுள்ளது. இந்த பாறைத்திட்டுகள் பசுமையான புல்வெளிகள் மற்றும் பூச்செடிகளுடன் உருவாகியுள்ளன.
மேலும், ஏரிக்கு பின்னால் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்த பகுதியை ஒரு ஓவியம் போன்று தோற்றமளிக்க வைக்கின்றன. வாகமண் ஏரிக்கு வரும் பயணிகள் இதில் படகுச்சவாரியிலும் ஈடுபட்டு மகிழலாம்.
இந்த பாறைத்திட்டுகளில் நடந்தபடி சுற்றுலுமுள்ள இயற்கைக்காட்சிகளை ரசிப்பதும் ஒரு ஆனந்தமான அனுபவமாக இருக்கும். சாலையிலிருந்து பார்க்கும்போது இந்த ஏரியானது மூன்று பாறைத்திட்டுகளால் சூழப்பட்டுள்ளது போன்று காட்சியளிக்கிறது.
பிக்னிக் சிற்றுலா, பொழுதுபோக்கு பயணம் மற்றும் உலாவல் போன்றவற்றுக்கு இந்த ஏரிப்பகுதி மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது. நிறைய படங்களுக்கான பாடல் காட்சிகளும் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன. எனவே உங்களுக்கு பிடித்தமான நடிகரை இங்கு படப்பிடிப்பில் நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.