வாரங்கல் பிளானெட்டேரியம் அல்லது பிரதாபருத்ரா பிளானட்டேரியம் என்றழைக்கப்படும் இந்த கோளரங்கம் வாரங்கல் நகரிலுள்ள முக்கிய அறிவியல் மையமாக பிரசித்தி பெற்றுள்ளது.
வானியல் குறித்த விழிப்புணர்ச்சியை மக்கள் மற்றும் இளந்தலைமுறையினர் மத்தியில் உருவாக்கும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. பொழுதுபோக்கு மற்றும் கல்வி ஆகிய இரண்டும் இணைந்த ஒரு வளாகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனை மற்றும் ஆர்வம் போன்றவற்றை இளம் மாணவர்கள் மனதில் உருவாக வேண்டும் என்பதும் இந்த கோளரங்கத்தின் பிரதான நோக்கமாகும். கோடைக்காலத்தில் இந்த கோளரங்கத்திற்கு செய்து விட்டு மாலையில் சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்வது ஒரு நல்ல பயண திட்டமாக இருக்கும்.