காலேஜ் டில்லா அகர்தலா நகரத்தின் மையக்கேந்திரம் என்றே சொல்லலாம். மஹாராஜா பீர் பிக்ரம் காலேஜ் இந்த காலேஜ் டில்லா வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கும் முக்கிய கல்லூரியாகும்.
1947ம் ஆண்டு துவங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிக்கு திரிபுரா மஹாராஜா பீர் பிக்ரம் மாணிக்யா பஹதூர் என்பவரது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்பகுதி மக்களுக்கு கல்வியறிவை புகட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லூரி துவக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி அளித்து வருகிறது.
254 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த கல்லூரியில் அந்நாளைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்நாளைய பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த மாணவர்களும் கல்வி பயின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்லூரி மட்டுமல்லாமல் சில திரிபுரா பல்கலைக்கழக கட்டிடங்கள் மற்றும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஃபுட்பால் ஸ்டேடியம் போன்றவை இந்த காலேஜ் டில்லா வளாகத்தில் அமைந்துள்ளன.
கட்டிடங்கள் அதிகமாக காணப்பட்டாலும் செழிப்பான மரங்களுடன் பசுமைச்சூழலுடன் இந்த வளாகம் காட்சியளிக்கிறது. பூங்காக்கள், ஏரிகள், பரந்த மைதானப்பகுதி போன்றவை இந்த காலேஜ் டில்லா வளாகத்தில் அடங்கியுள்ளன.