வேணுபன் புத்தா விஹார் எனும் இந்த பௌத்த மடாலயம் அகர்தலா நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பிரசித்தமான புத்த கோயிலாக விளங்கும் இந்த கோயிலில் உலோகாத்தால் ஆன புத்தர் சிலை காணப்படுகிறது.
பர்மாவில் உருவாக்கப்பட்ட இந்த சிலை பின்னர் இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
புத்தரின் பிறப்பு, ஞானஒளி, இறப்பு ஆகிய மூன்றோடும் சம்பந்தப்பட்டுள்ள பூர்ணிமா நாளில் இங்கு புத்த பூர்ணிமா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் வண்ணமயமான தட்டிகள் மற்றும் கொடிகள் ஆகியவற்றோடு இப்பகுதி முழுதும் திருவிழாக்கோலத்தில் ஜொலிக்கிறது. சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் வெகு தூரத்திலிருந்தும் பௌத்த யாத்ரீகர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு ரசிக்க வருகை தருகின்றனர்.
இந்தியாவிலுள்ள மிக முக்கியமான பௌத்த கோயில்களில் ஒன்றாக இந்த வேணுபன் புத்தா விஹார் பிரசித்தி பெற்றுள்ளது. புத்த குருமார்களும் புத்த மரபை பின்பற்றுபவர்களும் இக்கோயிலை மிக உயர்வாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
ஆன்மீக முக்கியத்துவம் மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் இந்த வேணுபன் புத்தா விஹார் பரவலாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications