பாஞ்ச் மஹால் என்பது பெயருக்கேற்றபடியே ஐந்து அடுக்குகளைக்கொண்ட மாளிகையாகும். கோடை வசிப்பிடமாக கட்டப்பட்ட இந்த மாளிகையில் குறிப்பாக அக்பரின் மூன்று மனைவியரும் மற்ற அந்தப்புர மகளிரும் வசித்திருந்தனர்.
மேலும் அக்பரின் மனைவியான ஜோதா பாயின் அரண்மனை மற்றும் மன்னர் அறை ஆகியவற்றோடு இந்த மாளிகை இணைக்கப்பட்டிருக்கிறது.
காற்று மாளிகை எனும் சிறப்புப்பெயரையும் இந்த பாஞ்ச் மஹால் மாளிகை பெற்றிருக்கிறது. அதாவது, காற்று நன்றாக இந்த மாளிகையின் உள்ளே பரவி ஆக்ராவின் கடும் வெப்பத்தை தணிக்கும் வகையில் இது பாரசீக கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டிருக்கிறது.
மற்றொரு சிறப்பு அம்சமாக இந்த மாளிகையின் ஒவ்வொரு மேல் அடுக்கும் அதன் கீழே உள்ள அடுக்கைவிட அளவில் சிறியதாக கட்டப்பட்டிருப்பதாகும். தரைத்தளம் 130 அடிக்கு 40 அடி என்ற அளவிலும் ஐந்தாவது தளம் 10 அடிக்கு 10 அடி என்ற அளவிலும் காணப்படுகிறது.
மேலும் ஐந்தாவது தளத்தில் ஒரு சதுர வடிவிலான சாத்ரி மாட அமைப்பு அலங்கார விளிம்பு அமைப்புகளுடன் எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த மாளிகையின் ஒவ்வொரு தளமும் கலை நுணுக்கம் கொண்ட அலங்காரத்தூண்களோடு காணப்படுக்கின்றன. காற்று நன்றாக உள் நுழையும் வகையில் ஒவ்வொரு தளமும் நாலாபுறமும் திறந்தே உள்ளது. தரைத்தளம் சேவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications