1648ம் ஆண்டு ஷாஜஹான் மன்னரால் அவரது பிரிய மகள் ஜஹன்னாரா பேகம் என்பவரின் நினைவாக கட்டப்பட்ட இந்த ஜம்மா மஸ்ஜித் வெள்ளிக்கிழமை மசூதி என்றும் ஜாமி மசூதி அழைக்கப்படுகிறது.
சிவப்பு மணற்பாறைக்கற்களால் கட்டப்பட்டிருக்கும் இந்த மசூதி வெண்பளிங்கு கற்களால் ஆன அலங்கார அமைப்புகளை கொண்டுள்ளது. இதன் சுவர் மற்றும் கூரைப்பகுதியில் நீல வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான இது நகரின் மையப்பகுதியில் ஆக்ரா கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது.
ஒரு உயர்ந்த பீட அமைப்பின்மீது உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மசூதிக்குள் விதான வளைவுகள் கொண்ட ஐந்து வாயில்கள் வழியாக நுழையலாம். மசூதியின் சுவர்களில் பதிக்கப்பட்ட முக்கோணவியல் ஓவியங்கள், வண்ண ஓடுகள் மற்றும் எழுத்துப்பொறிப்புகள் போன்றவற்றை காணலாம்.
இந்த மசூதியின் பிரதான தொழுகை முற்றத்தில் ஒரே சமயத்தில் 10000 பேர் அமர்ந்து தொழுகையில் ஈடுபடலாம். ஷேய்க் சலீம் சிஸ்தி எனும் பெயர்பெற்ற சூஃபி ஞானியின் கல்லறையும் இந்த மசூதி வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.