நிலவொளிப்பூங்கா என்ற பொருளை தரும் மெஹ்தாப் பாக் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பூங்கா 1631ம் ஆண்டு மற்றும் 1635ம் ஆண்டுகளுக்கிடையே உருவாக்கப்பட்டிருக்கிறது.
25 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ரம்மியமான பூங்கா யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது. தாஜ் மஹால் மாளிகையோடு சமச்சீரமைப்பில் வரும்படியாக இந்த பூங்கா அதே அளவு பரப்பில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
எண்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ல ஒரு பெரிய தடாகமும் இந்த பூங்காவின் மையத்தில் காணப்படுகிறது. இந்த தடாகத்தின் நீரில் விழும் தாஜ் மஹாலின் பிம்பத்தை சுற்றுலாப்பயணிகள் பெரிதும் விரும்பி பார்த்து ரசிக்கின்றனர். இந்த தடாகத்துக்கான நீர் ஒரு படிப்படியான நீர்வீழ்ச்சி அமைப்பின் வழியாக வருவது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த பூங்கா யமுனை நதியின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனவே இந்த பூங்கா வளாகம் நீரால் அரிக்கப்பட்டு தற்போது சற்றே சிதிலமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது.
மணற்பாறைக்கற்களால் எழுப்பப்பட்ட நான்கு தூண்கோபுரங்கள் இந்த பூங்கா வளாகத்தில் நான்கு மூலைகளிலும் இருந்திருக்கின்றன. இருப்பினும் தற்போது ஒரே ஒரு கோபுரம் மட்டுமே மீதம் உள்ளது.
பூங்காவின் வடக்கிலும் தெற்கிலும் இருக்கைகள் அமைந்திருந்த மண்டபத்தின் அஸ்திவாரங்கள் இன்றும் பார்வைக்கு தென்படுகின்றன.