இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தோலஜி என்றழைக்கப்படும் ‘இந்திய பாரம்பரிய ஆராய்ச்சி மையம்’ 1956ம் ஆண்டு புகழ் பெற்ற குஜராத்தி வணிகரான கஸ்தூர்பாய் லால்பாய் என்பவரால் துவங்கப்பட்டிருக்கிறது.
புராதனப்பொருட்கள், தொல்லியல் சான்றுகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் இது துவங்கப்பட்டிருக்கிறது. ஹிந்து, ஜைன, பௌத்த புனித நூல்கள், இலக்கிய நூல்கள், மொழியிலக்கண நூல்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்தையும் இந்த மையம் கொண்டிருக்கிறது.
76000 எழுத்துப்பிரதிகள், 500 ஓவியநூல்கள் மற்றும் 45000 அச்சு நூல்கள் ஆகியவற்றை கொண்ட ஜைன இலக்கியப்பிரிவு இங்கு இருப்பதிலேயே மிகப்பெரிய சேகரிப்பாக காணப்படுகிறது.
சம்ஸ்கிருதம், அபபிரம்ஸா, பாலி, ஹிந்தி, பழைய குஜராத்தி மொழி மற்றும் ராஜஸ்தானியில் எழுதப்பட்ட பல பழமையான நூல்களும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
கல்வெட்டு குறிப்புகள் மற்றும் சுடுமண் பொருட்கள், புராதன மரப்பொருட்கள், குறு ஓவியங்கள், துணி ஓவியங்கள், வெண்கலப்பொருட்கள், இந்திய நாணயங்கள், ரவீந்திரநாத் தாகூர் வரைந்த ஓவியங்கள் மற்றும் திபெத்திய-நேபாள கலைப்பொருட்கள் போன்றவை இங்குள்ள இதர முக்கியமான அரும்பொருட்களாகும்.



Click it and Unblock the Notifications