கன்காரியா ஏரி குதுபுதீன் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏரியின் மையப்பகுதியில் நஜினா வாடி எனும் கோடைவாச அரண்மனையும் கட்டப்பட்டிருக்கிறது.
ஒரு தோட்டப்பூங்காவின் மையத்தில் இந்த அரண்மனை வீற்றிருக்கிறது. தற்போது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த ஏரிப்பகுதி பிரபலமடைந்துள்ளது.
எனவே இந்த ஏரிப்பகுதியில் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கென ஒரு விளையாட்டு ரயில், பல்வேறு விளையாட்டு அமைப்புகள் கொண்ட ‘பால்வாடிகா’ , பயணிகளுக்கான படகுச்சவாரி வசதிகளை அளிக்கும் படகுத்துறை , ஒரு வனவிலங்கு காட்சியகம் மற்றும் ஒரு இயற்கை வரலாறு அருங்காட்சியகம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
இரவு நேரத்தில் ஏரிப்பகுதியில் உள்ள வண்ண விளக்குகள் மற்றும் நஜினா வாடி அரண்மனையின் வண்ணமயமான நீரூற்றுகள் இந்த கன்காரியா ஏரி ஸ்தலத்தை ஒரு சொர்க்கபுரி போல் ஒளிரவைக்கின்றன.



Click it and Unblock the Notifications