CEE (சென்டர் ஃபார் என்விரான்மெண்ட் எடுகேஷன்) எனும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் திட்ட வளாகமாக இந்த சுந்தர்வன் எனும் வனவிலங்கு காட்சியகம் இயங்குகிறது.
இளைய தலைமுறையினர் மத்தியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூங்கில் தோப்புகள் மற்றும் ஆல மரங்கள் நிரம்பிய இந்த இயற்கை வளாகத்தில் தீங்கு தராத விலங்கினங்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் பாம்பு வகைகள் கூண்டுக்கு வெளியே கொண்டுவரப்பட்டு பார்வையாளர்களுக்கான காட்சி விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ரஸ்ஸல் வைப்பர், ரெட் சேன்ட் போ மற்றும் இந்திய நாகம் போன்றவை இங்கு பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.
ஆமை, சதுப்பு நில முதலை, முள்ளம்பன்றி, மீன் காட்சியகம் மற்றும் மயில், அண்டங்காக்கை போன்றவற்றையும் இந்த இயற்கைப்பூங்காவில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications