ஏஹோலுக்கு வரும் பயணிகள் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கலகநாத கோயில்கள் ஆகும். இந்த கோயில் தொகுப்பானது மலப்பிரபா நதிக்கரையில் உள்ள 38 கோயில்களை உள்ளடக்கியதாகும்.
இந்த கோயில் தொகுப்பின் பிரதான கோயில் கலகநாத கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது 8ம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக அறியப்படுகிறது.
சிவனுக்கான கோயிலாக உருவாக்கப்பட்ட வளைவான கோபுரத்தைக்கொண்டுள்ளது. இதன் நுழைவாயிலில் கங்கா, யமுனா போன்ற நதிக்கடவுள்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.மேலும் இந்தக்கோயில் ஒரு பிரகாரம், கருவறை, ஒரு உள்பிரகாரம் மற்றும் ரேகநகர கோபுரம் போன்றவற்றை கொண்டுள்ளது.
இங்குள்ள கோயில் தொகுதியில் இது ஒன்றே சேதமடையாமல் முழுமையாக உள்ளது என்பதும் ஏனைய கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன என்பதும் ஒரு சோகமான விஷயம்.



Click it and Unblock the Notifications