குருத்வாரா குரு கா மஹால் எனப்படும் இந்த குருத்வாரா தங்கக்கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. இது அம்ரித்ஸர் நகரை நிர்மாணித்த குரு ராம்தாஸ்ஜி அவர்களால் 1573ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும்.
தனது குடும்பத்தினர் வசிப்பதற்காக இதனை அவர் கட்டியுள்ளார். அவரது மகனான குரு அர்ஜன் தேவ்ஜி இந்த வீட்டில்தான் 5 வது சீக்கிய குருவாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
காலப்போக்கில் இந்த குருத்வாரா குரு கா மஹால் எனப்படும் மாளிகை குரு அர்ஜன் தேவ்ஜியின் மகனான குரு ஹர்கோபிந்த்ஜி அவர்களது பிரமாண ஸ்தலமாகவும் பயன்பட்டிருக்கிறது. மேலும், இதே மாளிகையில்தான் குரு ஹர்கோபிந்த்ஜியின் மகன்களான பாபா அடல் ராய் மற்றும் குரு தேஜ் பஹதூர்ஜி ஆகியோர் பிறந்துள்ளனர்.
பின்னாட்களில் குரு ஹர்கோபிந்த்ஜி மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த குடும்ப மாளிகையை ஒரு கோயிலாக மாற்றினர். இதன் உள்ளே ஒரு பெரிய செவ்வக வடிவ கூடத்தில் கிரந்த சாஹிப் நூலும் வைக்கப்பட்டது. குரு தேஜ் பஹதூர் ஜயந்தியின் போது இந்த குருத்வாராவுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.