ஸ்ரீ அகால் தக்த் எனும் பெயருக்கு ‘அழியா அரியணை’ என்பது பொருளாகும். சீக்கியர்களின் ஆன்மீக தலைமை அமைப்பான ‘கால்சா’வின் பீடமாக இந்த ஸ்ரீ அகால் தக்த் செயல்படுகிறது.
சீக்கிய குரு ஸ்ரீ குரு கோபிந்த் அவர்களால் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கம்பீர மாளிகை இந்தியாவிலுள்ள ஐந்து தக்த் பீடங்களில் உச்சமான ஒன்றாக வீற்றிருக்கிறது. தங்கக்கோயில் எனப்படும் ஹர்மந்திர் சாஹிப் குருத்வாரா வளாகத்திலேயே இந்த ஷீ அகால் தக்த் பீடம் அமைந்திருக்கிறது.
சீக்கிய பாரம்பரியத்தின் உன்னத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஐந்து அடுக்குகளை கொண்ட கம்பீர மாளிகை அமைப்பாக இந்த ஷீ அகால் தக்த் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
சலவைக்கற்களால் கட்டப்பட்டு தங்கத்தகடு போர்த்தப்பட்ட குமிழ் வடிவ மாடக்கூரை அமைப்புடன் இந்த மாளிகை காட்சியளிக்கிறது. பகல் நேரத்தில் தங்கக்கோயிலில் வைக்கப்படும் ‘அதி கிரந்த்’ மறை நூல் இரவில் இந்த ஸ்ரீ அகால் தக்த் மாளிகைக்கு கொண்டு வரப்படுகிறது.
1984ம் ஆண்டு தங்கக்கோயில் வளாகத்தில் நடந்த கலவரத்தின்போது சீக்கிய போராட்டக்காரர்கள் இந்த மாளிகையில்தான் தங்களது ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.