சந்திரகிரி கோட்டை தனக்கு ஒரு புறத்தில் தென்னை மரங்கள் எல்லையமைத்த சந்திரகிரி நதியையும், மறுபுறம் பிரம்மாண்ட அரபிக் கடலையும் கொண்டு மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் மேற்கு பாதுகாப்பு அரண் அமைந்துள்ள பகுதியிலிருந்து நீங்கள் கண்ணை கவரும் சூரிய அஸ்த்தமன காட்சியை கண்டு ரசிக்கலாம்.
சந்திரகிரி கோட்டை 17-ஆம் நூற்றாண்டில் பெடானூரை சேர்ந்த சிவப்ப நாயக் மன்னரால் கட்டப்பட்டது. அப்போது கொளத்துநாடுக்கும், துளுநாடுக்கும் சந்திரகிரி நதிதான் எல்லையாக இருந்து வந்தது. இந்த இரு சாம்ராஜ்யங்களும் அந்த காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக விளங்கி வந்தன.
அதன்பிறகு விஜயநகர பேரரசு துளுநாட்டை கைப்பற்றி சந்திரகிரியை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு சந்திரகிரி சுதந்திர பிரதேசமானதால், சந்திரகிரி கோட்டை அங்கு கட்டப்பட்டது.
மேலும் அதன் பின்னர் சந்திரகிரி கோட்டை மைசூர் ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டு, பின்னர் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் வசம் சென்றது. இப்போது இந்தக் கோட்டையை தொல்பொருள் துறையினர் பராமரித்து வருகின்றனர்.