கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் அமைந்திருக்கும் பைந்தூர் கிராமத்தின் அழகுக்கும், கவர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்குவது பைந்தூர் கடற்கரையே ஆகும். இது மரவந்தே கடற்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பைந்தூர் கடற்கரையின் அமைதிக்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அதோடு இங்கு சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் கவின்மிகு காட்சி பயணிகளை வெகுவாக கவரக்கூடிய ஒன்று.
பைந்தூர் கடற்கரைக்கு அருகில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட கொல்லூர் மூகாம்பிகை கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இது தவிர பைந்தூர் மலைகள், முருதேஸ்வர் மற்றும் ஒட்டினன்னே குன்று ஆகியவையும் இப்பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை வெகுவாக கவரக் கூடியவை.



Click it and Unblock the Notifications