மிசோராமின் மிகப்பெரிய குகைகளில் குங்காவ்ர்ஹி குகை ஒன்றாகும். ஃபர்கான் மற்றும் வாபய் கிராமங்களுக்கு இடையே இந்த குகை அமைந்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஆவிகள், குங்காவ்ர்ஹி என்ற ஒரு பெண்ணை கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது. நதிரா என்ற வீரனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை கடத்திய ஆவிகளிடமிருந்து அவன் தன் காதலியை மீட்டான்.
அதன் பின் இந்தக் குகை அந்த பெண்ணின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சம்பையில் இருந்து சுற்றுலா பேருந்துகள் மூலம் இலக்கை அடையலாம்.