மனிதனை தின்னும் கழுகிடம் இருந்து தப்பிக்க கிராமவாசிகள் இங்கு 6 குகைகளை உருவாக்கியதாக கருதப்படுகிறது.
முரா என்ற கொடூரமான கழுகு இங்கு ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டுக்கூரைகளின் மேல் அமர்ந்து தனது வாலால் சத்தமெழுப்பி, மனிதர்களை வெளியே கொண்டு வருமாம்.
பின் அவர்களை தன் கூரிய அலகுகளால் கொத்தித் தின்றும் விடுமாம். தினமும் இப்படி உயிர்பலிகள் ஏற்பட்டதால் இந்த கழுகிடமிருந்து தப்பிக்க கிராம மக்கள் இங்கு 6குகைகளை ஏற்படுத்தினார்களாம். சம்பையில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்தை தனியார் வாகனங்கள் மூலம் அடையலாம்.