சந்திபூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சலிங்கேஷ்வர். அடர்ந்த பசுமை நிறைந்த தாவரங்களுக்கு மத்தியில் பாறைகளால் ஆன மலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
தனிமை நிறைந்த இடத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது இக்கோவில். மலை மேல் இருக்கும் இக்கோவில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டதாகும்.
இங்குள்ள இரண்டு பாறைகளுக்கு மத்தியில் இயற்கையாக தோன்றிய ஐந்து சிவலிங்கங்களை காணலாம். இந்த லிங்கங்களின் மீது ஒரு ஓடை பாய்ந்தோடுகிறது. இதனருகில் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கே பூசாரிகள் பூஜைகள் புரிந்து கடவுளை வழிபடுவதுண்டு.
இந்த கோவிலை அடைய 263 படிகள் ஏற வேண்டும். இந்த படிகள் இங்குள்ள மலையடிவாரத்தில் ஆரம்பிக்கும். இந்த படிகளை அங்குள்ள பல ஓடைகள் நனைத்துக் கொண்டே இருக்கும். சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்ற தலமாக விளங்கும் இந்த இடத்தில் மலையடிவாரத்திற்கு செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications