பாலேஷ்வர் மாவட்டத்தில் வாழும் உள்ளூர் மக்களுக்கு புனித ஸ்தலமாக விளங்குகிறது ரெமுனா. இது சந்திபூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. கோபிநாத் கடவுளுக்காக கட்டப்பட்ட கீர்சோரா கோபிநாத் கோவிலை இங்கு காணலாம்.
சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலான இங்கு ஸ்ரீ சைதன்யா மகாபிரபு தன் குருநாதர் மதபென்ர பூரியுடன் வருகை தந்ததாக நம்பப்படுகிறது. இங்கு விசேஷமாக தயாரிக்கப்படும் கீர் என்ற உணவு கடவுளுக்கு படைக்கப்படும். இதனை பக்தர்களுக்கு பிரசாதமாக கோவில் நிர்வாகம் வழங்கி வருகிறது.
ரெமுனாவில் ஜன்மாஷ்டமியும் சந்தன் பூர்ணிமாவும் கொண்டாடப்படுகிறது. ரெமுனாவிற்கு சுற்றுலா வருபவர்கள் பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களையும் பொருட்களையும் வாங்கி மகிழலாம்.
இதனருகில் மேலும் பல கோவில்கள் மடங்களும் உள்ளது. ராமச்சந்தி கோவில், கர்கேஷ்வர் கோவில், மதபேந்திர மடம் மற்றும் கௌடியா மடம் போன்றவைகளையும் இங்கே காணலாம்.



Click it and Unblock the Notifications