டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த நீர்வீழ்ச்சியாகும். இது அதன் பெயரை “த்லென்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இப்பகுதியின் குகைகளில் வாழ்ந்து வந்த ஒரு ராட்சத பாம்பின் (மலைப்பாம்பு) பெயரிலிருந்தே பெற்றுள்ளது.
புராணங்களின் படி, இந்த பாம்பைப் பிடித்த கிராம மக்கள் அதன் அழிச்சாட்டியத்தை நிறுத்தும் பொருட்டு அதனை கொன்றழித்திருக்கின்றனர். பின்னர் இதன் சதைப் பகுதியை விருந்தாகவும் உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
இந்த பாம்பு கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ளது டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் புகழ் மென்மேலும் வளர இப்புராணமே முக்கிய காரணமாகத் திகழ்கிறது.
உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியையும், சீர்கேடு, பேராசை மற்றும் தீமை ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய த்லென் என்ற பாம்பைக் கொல்ல நடந்த சண்டையை சித்தரிக்கும் இயற்கையான பாறை செதுக்கல்களையும் காண்பதற்காகவே இங்கு வருகின்றனர்.
டெயின்-த்லென், சிரபுஞ்சி செல்லும் வழியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு ஏற்ற வழி, ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலாப் பேருந்து அல்லது கார் மூலம் செல்வதே ஆகு