பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை, சிரபுஞ்சியின் சுற்றுலா ஈர்ப்புப் பட்டியலில் மிகச் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குதிரையேற்றம், பாரம்பரிய வில்வித்தை போன்றவற்றின் சுவாரஸ்யமான கதம்பமாகத் திகழும் இந்த இடம், பல ஏக்கர் பரப்பளவிலான பசுமையான புல்வெளிகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
வெகு காலம் முன்பே இங்கு வந்து குடியேறி, சில பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வந்த, ஆங்கிலேய வம்சாவளியினரான “ஷாட்வெல்ஸ்” குடும்பத்துக்குச் சொந்தமானது இந்த இடம். அவர்கள் இங்கு இருந்த காலத்தில் கட்டிய இந்த இடம் பழங்காலத்தைப் பற்றிய சிறு பார்வை நமக்குக் கிடைக்க வழி செய்கிறது.
இன்று இந்த இடம், ஒரு தேநீர் விடுதி, பழங்கால சிதிலங்களுக்கிடையில் கட்டப்பட்டுள்ள ஒரு ஓய்விடம், ஒரு சோலை, மற்றும் ஒரு இயற்கை வழித்தடம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த இடத்தை சூழ்ந்து நிற்கும், முடிவிலி போல் காட்சியளிக்கும் நீல மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் பூரண பரப்பைக் கண்டு களிக்கும் வண்ணம் ஒரு நோக்குமனையும் இங்கு கட்டுப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலாக் காரில் பயணித்து, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த இடத்தை எளிதாக அடையலாம்.