சிரபுஞ்சியின் வியத்தகு பூங்காவான ஸா-ஐ-மிகா பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்களோடு கல்வி தொடர்பான ஆச்சரியங்களையும் இங்கு வருவோர்க்கு வாரி வழங்குகிறது.
இங்கு, கைப்பந்து அரங்கம், கூடைப்பந்து அரங்கம், சறுக்கு வளையம், பேட்மிட்டன் அரங்கம் போன்ற ஏராளமான விளையாட்டு அரங்கங்களையும், குழந்தைகள் விளையாடுவதற்காக போடப்பட்டுள்ள சறுக்கு மரங்கள் மற்றும் ஊஞ்சல்களைக் கொண்டிருக்கும் மைதானத்தையும் காணலாம்.
மேலும், இங்கு உள்ள குழந்தைகளுக்கான பிரத்யேக நீச்சல்குளத்தில் தகிக்கும் கோடைகாலங்களில் நீந்தி, குழந்தைகள் தம் உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.
இப்பூங்காவில் தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இங்கு உள்ள விடுதிகள், பாரம்பரியமான காஸி குடில்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காவெங்கிலும் காணப்படும் சுற்றுலா குடில்கள், தாங்களே சமைத்து தம் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் அளவளாவி மகிழ விரும்புவோரை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.
நகரின் பரபரப்புகளில் இருந்து விலகி அமைதியான, மனநிம்மதியளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவோருக்கெனவே உருவாக்கப்பட்டுள்ள கருத்தரங்குக் கூடம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது.
ஒருவர் ஸா-ஐ-மிகா பூங்காவை எளிதாக அடைய வேண்டுமெனில், ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு பேருந்து அல்லது கார் வசதியை உபயோகித்துக் கொள்ளலாம். மூர்ச்சையடைய வைக்கும் அழகு பொங்கும் பச்சை மலைகளின் ஊடாக பயணம் செய்து வரும்போது இயற்கை அழகில் மனம் கிறங்கிப் போகலாம்.



Click it and Unblock the Notifications