அழகானதும், மிகவும் பிரபலமான நோக்குமுனையுமாகிய தங்க்கரங் பூங்காவிலும், பூங்காப் பகுதியில் அமைந்துள்ள பசுமை இல்லத்திலும் பல்வேறு வகை செடிகள் மற்றும் மரங்களைக் காணலாம்.
இந்த குறிப்பிட்ட பூங்கா, இயற்கையைப் பற்றி பொருட்படுத்தாது, ஊஞ்சல் அல்லது ஸீ-ஸா, அல்லது ஒரு சறுக்கு மரம் போன்றவற்றில் விளையாடுவதையே தன் வாழ்நாளின் ஆகப்பெரும் இன்பமாகக் கருதும் குழந்தைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவெங்கிலும் காணப்படும் உயரம் குறைந்த மரங்கள் மற்றும் பலகைகள் இங்கு வருவோர்க்கு ஓய்வு அளிக்கும் இடங்களாக விளங்குகின்றன. இப்பூங்கா வளாகத்தினுள், ஒரு அழகிய சிறு நீரூற்றும் கட்டப்பட்டுள்ளது.
உல்லாசப் பயணத்துக்கான மிகச் சிறந்த இடமாக இருப்பதோடல்லாமல், தங்க்கரங் பூங்கா அருகில் உள்ள வங்கதேச சமவெளியின் முழுப்பரப்பையும், இம்மலையில் சுமார் மூன்று படிநிலைகளில் உருண்டு கீழ் நோக்கிப் பாயும் கைன்ரெம் நீர்வீழ்ச்சியையும் நம் கண்களுக்கு விருந்தாக்கி, அதிகபட்ச புகழுடன் விளங்குகிறது.
தங்க்கரங் பூங்காவை அடைவதற்கான மிகச் சிறந்த வழி, ஷில்லாங்கிலிருந்து வரும் ஒரு சுற்றுலா வாகனத்தில் பதிவு செய்து வருவதேயாகும்.



Click it and Unblock the Notifications