அடர்ந்த பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ள தேவராயனதுர்க்கா எனும் இந்த மலைவாசஸ்தலம் விடுமுறைச்சுற்றுலாவுக்கான இனிமையான மலைநகரமாக அறியப்படுகிறது. 3940 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை வாசஸ்தலம் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையைப்பெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தேவராயனதுர்க்கா நகரம் இங்குள்ள கோயில்கள், வனப்பகுதி மற்றும் அற்புதமான இயற்கை எழில் காட்சிகளுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது.
வரலாற்றுக்காலத்தில் உடையார் வம்சத்தினரால் ஆளப்பட்டுள்ள தேவராயனதுர்க்கா நகரமானது சிக்க தேவராஜ உடையார் என்ற மன்னரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் இந்த பகுதியை ஆண்ட ஜடகா என்ற உள்ளூர் ஜமீனிடமிருந்து இந்த நகரத்தை கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.
தேவராயனதுர்க்காவின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்கள்
இந்த மலை வாசஸ்தலத்தில் முக்கிய கோயில்களாக போகநரசிம்மர், யோகநரசிம்மர் மற்றும் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்கள் போன்ற மூன்று கோயில்கள் மூன்று உயரங்களில் காணப்படுகின்றன.
இவற்றில் போகநரசிம்மர் கோயில் அடிவாரத்திலும், யோகநரசிம்மர் கோயில் மலை உச்சியிலும் அமைந்துள்ளன. லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பாதி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலை நகரத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக நாமட சிலுமே எனப்படும் அதிசய நீரூற்று பிரபல்யமாக அறியப்படுகிறது. இந்த நீரூற்று ராம்பிரானின் அம்பு இங்குள்ள பாறையை துளைத்ததால் ஏறபட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
இந்த நீரூற்றுக்கருகில் ராமரின் பாதச்சுவடுகளும் தென்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்குள்ள காடுகளில் பல அபூர்வ மூலிகைச்செடிகள் பயிராகின்றன. மேலும் ஷீ நரசிம்ம ஜயந்தி திருவிழா இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பெங்களூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் இந்த தேவராயன துர்க்கா அமைந்துள்ளது. இதன் அருகில் தும்கூர் ரயில் நிலையம் உள்ளது. பேருந்து வசதிகளும் ஏராளம் உள்ளன.