ஜோரண்டா, தேன்கனலிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மஹிமா தர்மாவின் சமயஞ்சார்ந்த மையமாக விளங்குகிறது ஜோரண்டா. ஒடிசா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே சமயஞ்சார்ந்த வழிபாட்டு மரபாக விளங்குவதால் மஹிமா தர்மா அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
மஹிமா வழிபாட்டு மரபை தோற்று விட்டவரான மஹிமா கோசைனின் ஓய்வு இடத்தை பார்ப்பதற்காக ஜோரண்டாவிற்கு பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. ஜோரன்டாவில் கண்டு களிக்க மேலும் பல கோவில்கள் உள்ளது.
சுன்யா மந்திர், காடி மந்திர் மற்றும் துணி மந்திர் போன்றவைகள் அவற்றில் சில. மகா நட்சத்திரம் தோன்றும் பௌர்ணமியின் போது ஒவ்வொரு வருடமும் ஜோரண்டாவில் பெரிய திருவிழா ஒன்று நடத்தப்படும்.
இந்த திருவிழாவில் பங்கேற்க பல மக்கள் இங்கு வருவதுண்டு. சொல்லப் போனால் இது மஹிமா சமயத்தை சேர்ந்த மக்கள் நடத்தும் ஆண்டு விழாவாகும். 1874-ஆம் ஆண்டு முதல் இத்திருவிழா தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications