ஃபதேபூர் சிக்ரியின் பிரதான கோட்டையின் உள்ளே முகலாய பாரம்பரியப்படி அமைந்துள்ள இந்த அரண்மனை அக்பரின் இந்து மனைவியான ஜோதா பாயின் இல்லமாக விளங்கியது. அக்பர் மற்றும் ஜஹாங்கீர் ஆகிய இருவரின் ஆட்சியிலும் அதிகார மையமாக இவ்விடம் விளங்கியது.
துருக்கிய சுல்தானா என்றும் அழைக்கப்பட்ட இந்த அரண்மனையின் அக்பரின் இஸ்லாமிய மனைவி வாழ்ந்ததாக சிறிய அளவில் ஒரு மாற்றுக் கருத்தும் நிலவுகிறது.
அதன் ஆடம்பரமிக்க அலங்காரங்களுக்காகவும், பழங்கால கட்டமைப்புக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. ஏராளமான செலவில் சிறப்பான வேலையாட்களை வைத்து அக்பர் இக்கட்டிடத்தை கட்டியிருக்கிறார்.
சுற்றியுள்ள தோட்டங்களும், சுவர்வெட்டுக்களும் மேலும் அழகு சேர்ப்பவைகளாக இருக்கின்றன. வெளியேயும் உள்ளேயும் பூக்கள் மற்றும் வடிவங்களால் ஆன அலாங்காரங்களால் நிரப்பப்பட்டு உள்ளது.