கடக் பகுதியில் உள்ள பிரசித்தமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்த ரோண் ஒன்றாகும். முற்காலத்தில் ரோண் என்று அழைக்கப்பட்ட இந்த ஸ்தலமானது காவிய காலத்தைச்சேர்ந்த வீரர், குரு மற்றும் சிற்பியாக விளங்கிய துரோணாச்சாரியாரால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவரால் கட்டப்பட்டுள்ள பல கோயில்களை இது கொண்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இந்த ஸ்தலத்தின் குறிப்பிடும்படியான நினைவுச்சின்னங்களாக அனந்தஷயன கோயில், ஈஷ்வரா கோயில், கல்ல குடி (கற்கோயில்), லோகநாத கோயில், மல்லிகார்ஜுன கோயில். பர்ஷவநாத ஜெயின் கோயில் மற்றும் சோமலிங்கேஷ்வரா கோயில் போன்றவற்றை சொல்லலாம். பல கோயில்கள் இங்கு நிறைந்திருப்பதால் இந்த ரோண் ஸ்தலம் யாத்ரீகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications