கர்முக்தேஸ்வரர்-புலந்ஷார் சாலையில் மாவட்ட தலைநகரான கஜியாபாத்தில் இருந்து 78கிமீ தொலைவில் அமைந்துள்ளது பஹதுர்கார்ஹ் கிராமம்.
ஆரம்பத்தில் கர்ஹ் நானா என்றழைக்கப்பட்ட இவ்வூரின் பெயர் பின்னாளில் ஆட்சியாளர் நவாப் பஹதுர் கான் என்பவரால் மாற்றப்பட்டது. பதான் இனத்தவரான அவருக்கு இக்கிராமம் முகாலய அரசர் ஜஹாங்கீரால் பரிசாக வழங்கப்பட்டதாகும்.
மகாபாரதக் காலத்தில் இருந்து இக்கிராமம் இருப்பதாக நம்பப்படுகிறது. நாடோடிக்கதைகளின்படி மகாபாரத நாயகர்களில் ஒருவரான தான்வீர் கரன் என்பவரால் பஹதுர்கார்ஹ்யில் இருந்து 6.5கிமீ தொலைவில் உள்ள தற்காலத்து முஸ்தஃபாபாத் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.பழங்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் மிச்சங்கள் இன்றும் அப்பகுதியில் காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாது மண்பாண்டங்களுக்கும் இவ்வூர் புகழ் பெற்றிருக்கிறது. குர்ஜா மண்பாண்டக்கலை என இப்போது அழைக்கப்படுவது பஹதுர்கார்ஹ்யில் உருவானதுதான். முல்தானின் இருந்து 250 ஆண்டுகளுக்கு முன்பு இக்கலை இங்கு கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது கைத்தறி மற்றும் பால் உற்பத்திக்காகவும் இவ்வூர் புகழ்பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications