குருவாயூரிலுள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு அருகிலேயே இந்த வெங்கடாசலபதி கோயிலும் அமைந்துள்ளது. விஷ்ணுவின் மற்றொரு அவதாரமே இந்த வெங்கடாசலபதி ஆகும்.
இந்த கோயிலுக்கு விஜயம் செய்தால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.
சுற்றிலும் இயற்கை எழில் நிறைந்து காணப்படும் ஒரு அழகான இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. மாசடையாத அமைதியான சூழலைக்கொண்டுள்ள இந்த ஆன்மீக ஸ்தலம் நமது கவலைகளை நீக்கி சாந்தப்படுத்தும் ஆன்மிக ஜொலிப்புடன் வீற்றுள்ளது.