ஹரித்வாரில் இந்து தெய்வமான சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் மாயாதேவி கோவில் புகழ்பெற்ற ஸ்தலமாகும். இந்தியாவின் 52 சக்தி பீடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் இந்துக் கடவுளான ஆதிஸ்தாத்ரிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
புராணங்களின் படி தன் தந்தை தன் கணவரான சிவனை அவமானப்படுத்தியதால் மனமுடைந்து உயிர் துறக்கிறார் சதி. பின் இறந்த தன் மனைவியின் உடலை துக்கத்துடன் சிவன் தூக்கிக்கொண்டு கைலாச மலைக்கு சென்றுகொண்டிருந்த போது சதியின் உடல் பல பகுதிகளின் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு பகுதியும் ஒரு சக்தி பீடமாக மாறியதாகவும், அதில் மேல் பகுதி உடல் விழுந்த இடத்தில் மாயாதேவி கோவில் எழுப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. சிவனின் பாதியாகக் கருதப்படும் சக்தியை வழிபட வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.