இடுக்கி மாவட்டத்திலுள்ள இந்த செறுதோணி அணை கேரளாவிலுள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இது பெரியார் ஆற்றின் முக்கிய ஆறான செறுதோணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
இந்த அணையிலுள்ள நீர்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இப்பகுதிக்கே விநியோகம் செய்யப்படுகிறது. கரிம்பன், மஞ்சப்பாறா வாழத்தோப்பே, தடியன்பாடு மற்றும் மணியாரன்குடி போன்ற அருகிலுள்ள கிராமங்கள் இந்த மின் வினியோகத்தால் பயனடைகின்றன.
இடுக்கி நீர்த்தேக்கத்திட்டத்தின் மூன்று அணைகளில் இந்த செறுதோணி அணையும் ஒன்றாகும். இயற்கை காட்சிகளை படம் பிடிக்க இது மிகவும் ஏற்ற இடமாகும்.