புல்பணியிலிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கலிங்கா எனும் பள்ளத்தாக்குப்பகுதி இங்கு காணப்படும் நெளிவு நெளிவான சாலை அமைப்புகளுக்கு புகழ் பெற்றுள்ளது. மலையை சுற்றி சுழன்று ஏறும் இந்த சாலை அமைப்பில் பயணம் செய்யும் காண கிடைக்கும் எழிற்காட்சிகள் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன.
சாகச விரும்பிகள் இந்த சாலையில் வாகனம் ஓட்டும் அனுபவத்தை விரும்புகின்றனர். பல்வேறு மரவகைகள் வளர்ந்துள்ள விசாலமான மரத்தோட்ட பூங்காக்கள் மற்றும் மூலிகைச்செடி பூங்காக்கள் போன்றவையும் இந்த கலிங்கா பள்ளத்தாக்கு பிரதேசத்தில் காணலாம்.
மரத்தோட்ட பூங்காவில் தடிமனான மூங்கில் வகைகள் மற்றும் ரப்பர் மரங்களை பார்த்து ரசிக்கலாம். கலிங்கா கிராமப்பகுதியை சூழ்ந்துள்ள இந்த மரத்தோட்ட பகுதிகளிலிருந்து வரும் தாவர வாசனையும் காற்றும் பயணிகளை சாந்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் இயல்பை கொண்டுள்ளது.
சொல்லத்தக்க அளவிலான வரலாற்று பின்னணியையும் இந்த பகுதி பெற்றிருக்கிறது. ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஏராளமான சுதந்திரப்போராட்ட வீரர்கள் இந்த கலிங்கா மலை பூமியில் உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications