250 வருடங்கள் பழமையுடைய இந்த அமர்கர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தின் அமர்கர் கிராமத்திலுள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இதைக்கட்டிய ராஜா அமர் மால் என்பவர் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது.
நெல்வயல்களும் பசுமையான இயற்கைப்பிரதேசமும் இக்கோட்டையை சுற்றிலும் காணப்படுகின்றன. காடுகளாலும் மலைகளாலும் எல்லாப்புறங்களிலும் சூழப்பட்டிருக்கும் இந்த கோட்டை பயணிகளுக்கு ஒரு வித்தியாசமான காட்சியை அளிக்கிறது.