கரவ்ளி மாவட்டத்தில் சபோதரா எனும் இடத்திலுள்ள இந்த ராமத்ரா கோட்டை கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம் மற்றும் ரன்தம்போர் புலிகள் சரணாலயத்திற்கு இடையில் அமைந்துள்ளது.
இந்த கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்திலேயே கேலாதேவி காட்டுயிர் சரணாலயம் உள்ளது. இந்த கோட்டை ஸ்தலத்தில் பயணிகள் ஏரி மற்றும் கிராமியப்பகுதிகளை பார்த்து ரசிக்கலாம்.
1645ம் ஆண்டில் இந்த கோட்டையானது தாகுர் போஜ் பால் என்பவருக்கு அவரது தந்தையான கரவ்ளி மஹாராஜாவால் ‘ஜாகிர்’ ராஜ்ஜியமாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்றும் தாகுர் வம்சத்தை சேர்ந்த பிரிஜேந்திர ராஜ் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த கோட்டையை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த கோட்டைக்குள் இரண்டு கோயில்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று கணேஷக்கடவுளுக்கும் மற்றொன்று சிவபெருமானுக்கு எழுப்பப்பட்டுள்ளன. சிவன் கோயிலில் காணப்படும் பளிங்கு கல்லால் ஆன சிவன் சிலை 18ம் நூற்றாண்டின் கலைத்திறன் அம்சத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்த கோட்டைக்கு விஜயம் செய்யும் பயணிகள் அருகிலுள்ள விவசாய நிலங்களின் அழகுக்காட்சிகள், தாங் பீடபூமியில் அடர்ந்த புதர்கள், காளிசில் ஏரி மற்றும் அதன் கால்வாய்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
பரத்பூர் பறவைகள் சரணாலயத்திலிருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் இந்த ஏரிப்பகுதிக்கு வருவதை பார்ப்பது ஒரு இனிமையான அனுபவமாக உள்ளது.