கூர்க்கா ஃபோர்ட் எனப்படும் இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1437மீ உயரத்தில் சுபாது எனும் ராணுவ கண்டோன்மெண்ட் நகரத்தில் அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் கூர்க்கா இனத்தாரால் கட்டப்பட்ட இந்த கோட்டையில் போர்களில் பயன்படுத்தப்பட்ட-180 வருட பழமையை உடைய - பீரங்கிகள் காணப்படுகின்றன.
கூர்க்கா இனத்தார் போரில் தோற்றபின்னர் இந்த கோட்டைப்பகுதி ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தற்போது ஒரு முக்கியமான ராணுவ கண்டோன்மெண்ட் கேந்திரமாக விளங்கும் சுபாது நகரத்தில் 14 கூர்க்கா இந்திய ராணுவப்பயிற்சி மையங்கள் அமைந்துள்ளன.