Search
  • Follow NativePlanet
Share

கௌஸனி - சிறைபிடிக்கப்பட்ட பேரழகு!

21

பின்னர், இதன் பெரும் பகுதியை அந்த அரசர், `ஸ்ரீ சந்த் திவாரி' என்கிற குஜராத்தி பிராமணர் வசம் ஒப்படைத்தார். சுதந்திர போராட்ட காலத்தில் இப்பகுதிக்கு வருகை புரிந்த தேசத்தந்தை, `மகாத்மா காந்தி' இப்பகுதியின் அழகில் மயங்கி, கௌஸனியை `இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என வியந்து கூறியுள்ளார்.

அதனை மெய்பிக்கும் வகையில், ஆண்டு முழுவதும், ஏராளமான சுற்றுலா பயணிகள், கௌஸனியை சுற்றி பார்க்க, உலகம் முழுவதிலிருந்தும் வருகின்றனர்.

கௌஸனியில் அழகிய மலை மற்றும் மலைக்குன்றுகள் தவிர ஏராளமான ஆசிரமங்கள், கோயில்கள், டீ  எஸ்டேட்கள் ஆகியன உள்ளன. இங்கு அமைந்துள்ள பிரபலமான `அனஸக்தி' ஆசிரமத்தில், மகாத்மா காந்தி, சில நாட்கள் தங்கி சென்றுள்ளார்.

தற்போது, இந்த ஆசிரமம், ஒர் உறைவிட பள்ளி, மற்றும் ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு, உறைவிட வசதிகளுடன் சமையலறை வசதிகளும் வழங்கப்படுகிறது.

அது `சுமித்ரா நந்தன் பந்த் கேலரி', என அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில், அவரின் கையெழுத்து பிரதிகள், கவிதைகள் மற்றும் அவரது இலக்கிய படைப்புகளுடன் அவர் பெற்ற விருதுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும், அவருடைய பிறந்த நாள் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்பொழுது, அவரின் நினைவாக ஒரு மாநாடு நடைபெறும்.

இதற்கு, `ஹவுரா' மற்றும்`லக்னோ' உள்ளிட்ட முக்கியமான இந்திய நகரங்களுடன் ரயில் இணைப்பு உள்ளது.  கௌஸனி பஸ் நிலையம் நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுடன் பொது மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களுக்கு கௌஸனியில் இனிமையான வானிலை நிலவுவதால், பயணிகள் இம்மாதங்களில் சுற்றுலா செல்வது மிகவும் நல்லது.  

கௌஸனி சிறப்பு

கௌஸனி வானிலை

சிறந்த காலநிலை கௌஸனி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கௌஸனி

  • சாலை வழியாக
    பல மாநில அரசுக்கு சொந்தமான பேருந்துகள், `ரானிஹெட்',` நைனிடால்', `பிட்டோர்கார்', மற்றும் `அல்மோரா' போன்ற இடங்களில் இருந்து கௌஸனிக்கு இயக்கப்படுகின்றன. புது தில்லியில் இருந்து தனியார் சுற்றுலா பேருந்துகள் கௌஸனிக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கௌஸனிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் 132 கி.மீ. தொலைவில் உள்ள `காத்கோடம்' ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் `லக்னோ', `கொல்கத்தா', மற்றும் `புது தில்லி' உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தில்லியில் இருந்து 278 கி.மீ. தொலைவில் உள்ளது. தில்லி மற்றும் காத்கோடமிற்கு இடையே இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன். சுற்றுலா பயணிகள், இந்த ரயில் நிலையத்திலிருந்து கௌஸனிக்கு செல்ல வாடகை டாக்சிகள் மற்றும் பேருந்துகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    `பாந்த் நகர்' விமான நிலையம் கௌஸனியிலிருந்து 162 கி.மீ. தொலைவில் உள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள், புது தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் கௌஸனியை அடையலாம். டெல்லியிலிருந்து பாந்த் நகர் விமான நிலையத்திற்கு, ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு டெல்லியிலிருந்து கௌஸனிக்கு, ஏராளமான டாக்சிகள் மற்றும் பேருந்துகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue